Monday, January 23, 2012

சிவ ஆகமம் – அபிஷேகம்

சிவ ஆகமம் – அபிஷேகம்

7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள்: பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.

7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம்: எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நாபனம்

7.3 அபிஷேக திரவியங்கள் தரும் பலன்:

சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும்,

மணம் உள்ள தைலம் – சுகம் தரும்,

பஞ்சகவ்யம் – பாவத்தைப் போக்கும்,

பஞ்சாமிர்தம் – செழிப்பினைத் தரும்,

நெய் – மோக்ஷம் அளிக்கும்,

பால் – வாழ்நாள் வளர்ச்சி,

தயிர் – மக்கட் செல்வம் தரும்,

மாப்பொடி – கடன் விலக்கி ஆரோக்கியம் அளிக்கும்,

தேன் – சுகம் தரும்,

பழபஞ்சாமிர்தம் – செல்வங்கள் பெருகும்,

வாழைப்பழம் – பயிர் செழிக்கும்,

பல்லவம் – உலகை வயப்படுத்தும்,

மாம்பழம் – மகனுக்குச் சீர் சேர்க்கும்,

மாதுளை – கோபத்தை நீக்கும்,

கொளஞ்சி நாரத்தை – சோகத்தைப் போக்கும்,

நாரத்தை – ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,

எலுமிச்சை – மரணபயம் நீக்கும்,

சர்க்கரை – பகை களையும்,

இளநீர் – இன்பங்கள் நல்கும்,

அன்னாபிஷேகம் – நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,

சந்தனக் குழம்பு – தொலையா நிதியும் (லக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

7.4 பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

7.5 பஞ்சாமிர்தம் இரு வகை :

(1) ரஸ பஞ்சாமிர்தம் – ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.

(2) பல (பழ) பஞ்சாமிருதம் – மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

7.6 நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா – ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.

No comments:

Post a Comment