சிவ ஆகமம் – ப்ரதக்ஷிணம்
14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.
14.2 விநாயகருக்கு – ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு – இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு – மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் – நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு – ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.
சிவ ஆகமம் – பூஜை இல்லாவிடில்.
15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன;
1. படைத்தல் – அபிஷேகம்.
2. காத்தல் – நைவேத்யம்
3. ஸம்ஹாரம் – பலி போதல்
4. திரோபாவம் – தீபாராதனை
5. அனுக்ரஹம் – ஹோமம்,
பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும்?
15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத் தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.
15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும்.
2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும்.
3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும்.
4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும்.
5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷாமம் (பஞ்சம்) உண்டாகும்.
6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும்.
7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும்.
8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும்.
9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும்.
10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.
No comments:
Post a Comment